Sunday 26 September 2021

இப்படி இருந்தால் வாழக்கை நலமாக இருக்கும்

இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்

புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்

உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்

அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்

ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்

உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்

பொங்கல் மாதிரி குழைவா பேசனும்

அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்

பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்

சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்

ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது

நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது

பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது

ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது

புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது

கேசரி மாதிரி இனிமையா பேசனும்

பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்

அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்

அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்

புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்

ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்

டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்🙏🌹

Zero and infinity கண்டுபிடிப்பு

🤔 நம் முன்னோர்கள் ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து தன் நண்பர்களில் மனைவிக்கு பயப்படாதவர்களை எண்ண ஆரம்பித்தனர்.

இப்படித்தான் 0 (Zero) கண்டுபிடிக்கப்பட்டது

😀😇

பிறகு ஒருநாள்

மனைவிக்கு பயப்படுபவர்களை எண்ண ஆரம்பித்தனர்...

அப்படித்தான் infinity கண்டுபிடிக்கப்பட்டது

😉🙂

Tuesday 21 September 2021

சிறந்த தம்பதி

ஒரு பெரிய அரங்கம் -

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து

ஒரு கார் பரிசு வழங்குவது

என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.

அதில் ஒரு மனைவி

''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது,

கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள்

கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்

100/100!

எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று,

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய

அந்த சிறந்த தம்பதியையும்

மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய

ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்!

பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டை

போட்டுக்கொண்டு வந்தார்களே

அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்,

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க,

இல்லை arranged marriage என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள்,

திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல,

எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள்,

அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்

ஆனால் போட்டியின் நடுவர்

இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில்

மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து

ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,

எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே

இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!

இருவரும் ஆனந்தக்கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!

சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல,

தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது,

எல்லோரும் திரும்பி பார்க்க காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த

மனைவி:

நானும் எத்தனையோ நாள் தலைபாடா அடிச்சிகிட்டேன் :

சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு,

டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...

உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்...

கணவனும் பின்னாலேயே சுற்றிவர…

எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே

சுத்தறீங்க ?!

உங்களுக்கு தான் மூட்டுவலி இருக்கு இல்ல..

பேசாம ஒரு இடத்துல உட்காருங்க..

அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்...

எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்...

சீமையில இல்லாத மாப்பிள்ளைய அவர சொல்லனும்...

என்றபடி காரை சுற்றி சுற்றி வர…

வேடிக்கை பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள்!

.................................................

*அன்பையும் காதலையும்* *வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான்*

*வேண்டும் என்று யார் சொன்னது…*

பகை

ஏங்க.... பீச்ல இவ்ளோ நேரம் நல்லாதான பேசிட்டிருந்தீங்க...? இப்ப என்ன திடீர்னு நெர்வஸ்சா இருக்கீங்க...!?

பீச்ல அதோ அங்க தூரத்துல ஒக்காந்திருக்கிறது சைனாக் காரனும் அவன் பேமிலியும் தானே.,.!?

ஆமா... அப்படித்தான் தெரியுது....!?

அவன... கைமா பண்ண கை பரபரன்னு துடிக்குது...

ஹேய்... ஏன் இவ்ளோ டென்ஷனாரீங்க.. சாந்தமா ஒக்காருங்க...!?

இல்ல... விடு... அவங்கள ஒருவழி பண்ணிடுறேன்...

ஐய்யோ... தேச பக்தி இருக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா...!?
இது வேற பகைம்மா... தேச பக்திய இதோட மிங்கிள் பண்ணாத...!

பர்சனல் பகைக்கெல்லாம் அடிக்கப் போகாதீங்க...

இது பர்சனல் பகை இல்ல... பரம்பரைப் பகை எந்த சைனாக் காரன பாத்தாலும் என் நாடி நரம்பெல்லாம் துடிக்குது...

ஐய்யோ... பொண்ணு புள்ளைங்களோட வந்திருக்கான் அவங்கள தொட்டா பயங்கர அப்பன்ஸ் தெரியுமில்ல...

நா MGR படங்கள பாத்து வளர்ந்தவன்... கோடி ரூபா கொடுத்தாலும் பொண்ணு புள்ளைங்கள தொட மாட்டேன்... என்னோட டார்கெட் அந்த சைனா சப்ப மூக்கன் தான்... அவன அப்படியே குனிய வச்சி நடுமுதுகுல நங்கு நங்குன்னு குத்தனும் அப்புறம் அப்படியே தட்டாமலை சுத்தி வீசனும்... என்ன விடு...!
ஏங்க... டென்ஷன கொறைங்க... உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு ஞாபகம் வச்சுக்குங்க... எம் மேல சத்தியம் நா சொல்றத கேப்பீங்களா மாட்டீங்களா...!?
சரி... கேக்குறேன்...

சரி... அப்படின்னா மொத ஷோல்டர எறக்குங்க...
எறக்கிட்டேன்...!
பாடிய வெறப்பா வைக்காம லூசா விடுங்க...!?
ம்ம்.. செஞ்சிட்டேன்...
இப்ப... அப்படியே கடலைப் பாருங்க... அங்க நிறைய குழந்தைங்க கடல்ல வெளையாடுறத பாருங்க....
ம்ம்...
இப்ப... டென்ஷன் குறைஞ்சிடுச்சா...
ஓரளவு...!
சரி... இப்ப கண்ண மூடி ஒன்னு ரெண்டு மூனு எண்ணுங்க...
எண்ணிட்டேன்....
இப்ப டென்ஷன் மொத்தமும் போயிடுச்சா....
போயிடுச்சி...
சரி... இப்ப சொல்லுங்க சைனாக் காரனுக்கும் உங்களுக்கும் என்ன பரம்பரை பகை...!?
' ரவை' யை கண்டுப் பிடிச்சதே இந்த சப்பை மூக்கனுங்க தானாம்.😃🤣😂.!